2016&2017 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியாகி உள்ளது



2016&2017 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியாகி உள்ளது





கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது இதனில் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் 

  1. முதலில் வர்த்தமானியை  முழுவதையும் ஆறுதலாக வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள். 
  2. ஒவ்வொரு பாடநெறிக்குமான பிரத்தியேகமான தகைமைகள் மற்றும் இதர தேவைகள் குறித்து தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. வர்த்தமாணியின் சில பகுதிகளில் கவனத்திற் கொள்க என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை மிக தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். 
  4. உங்களது பாடங்கள் மற்றும் இஸட் புள்ளிகளின் அடிப்படையில் உங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற உத்தேச பாடப்பட்டியலைத் தயார் செய்யுங்கள். 
  5. இறுதி தீர்மானத்தின் பின்னர் பொருத்தமான பாடத்திற்கு விண்ணப்பியுங்கள்
  6. கடந்த முறைகளைப் போலல்லாது இம்முறை ஒன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். மேலதிகமாக பதிவூத் தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும்.
            நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

  1. 2016 ஆம் ஆண்டில் அல்லது 2017 ஆம் ஆண்டில் க.பொ.த.(உ.த.) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மாத்திரம் இதற்கு விண்ணப்பிக்க உரித்துடையவராவர். (சமய பாடநெறிகளுக்காக 4.5 மற்றும் 4.8 அத்தியாயங்கள் பொருத்தமாகும்). 
  2. அனைத்து விண்ணப்பதாரர்களும் இணையவழி முறைமை (Online) ஊடாகவூம் அத்துடன் பதிவூத் தபாலிலும் விண்ணப்பப்படிவம் ஒன்றை முன்வைத்தல் வேண்டும்.
  3. 2016 ஆம் ஆண்டில் அல்லது 2017 ஆம் ஆண்டில் அல்லது அவ்வாறு இல்லாவிட்டால் உரிய இரண்டு ஆண்டுகளிலும் க.பொ.த. (உ.த.) பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரா்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.  2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் உரியவாறு விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பதாரா்கள் இரண்டு விண்ணப்பங்களை அனுப்புவது தேவையற்றதுடன், ஒரே விண்ணப்பப்படிவத்தில் உரிய தகவல்களை சரியாக தனித்தனியே குறிப்பிடப்படல் வேண்டும். இரு விண்ணப்பங்களை அனுப்பும் போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  4. ஒவ்வொரு பாடநெறிக்கும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ள எண்ணிக்கை தொடர்பாக அவதானம் செலுத்தி பாடநெறியைத் தெரிவு செய்வது அவசியமானது.
  5. கடந்த வருடங்களில்  பௌத்தம், கத்தோலிக்கம், இந்து ஆகிய சமயப் பாடங்களுக்கு மாத்திரமே வயதெல்லை 25 ஆகக் குறிப்பிடப்பட்டது. இஸ்லாம் பாட விண்ணப்பத்திற்கான வயதெல்லையும் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  6. ஒவ்வொரு பாடநெறி தொடர்பாக தேவையான விசேட தகைமைகள் அந்தந்த பாடநெறியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.


    இதன் போது க. பொ. த. (சா.த.) பரீட்சையில் 2008 புதிய பாடத்திட்டத்தின் கீழ் மற்றும் அதற்குமுன் நடைமுறைப்படுத்தப்பட்ட பழைய பாடத்திட்டத்தின்படி கீழ்க்குறிப்பிட்ட பாடங்கள் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.
      2008 – க.பொ.த. (சா.த.) புதிய பாடத்திட்டத்தின் கீழ் கவனத்திற் கொள்ளப்படுகின்ற பாடங்கள்:-
        1. மைய (பிரதான) பாடங்கள் :
          (i) சமயம் (ii) சிங்கள மொழியூம் இலக்கியமும்/ தமிழ் மொழியூம் இலக்கியமும் (iii) ஆங்கிலம் (iv) கணிதம்
            (v) வரலாறு (vi) விஞ்ஞானம்
              2. தொகுதிப் பாடங்கள் :
                (i) முதலாவது பாடத்தொகுதியில் யாதேனும் ஒரு பாடமும் (ii) இரண்டாவது பாடத்தொகுதியில் யாதேனும் ஒரு பாடமும் (iii) மூன்றாவது பாடத்தொகுதியில் யாதேனும் ஒரு பாடமும் 2008 க்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்ட க.பொ.த. (சா.த.) பழைய பாடத்திட்டத்தின் கீழ் கவனத்திற் கொள்ளப்படுகின்ற பாடங்கள்:-
                  (i) சமயம் (ii) சிங்கள மொழியூம் இலக்கியமும்/தமிழ் மொழியூம் இலக்கியமும் (iii) ஆங்கிலம் (iv) கணிதம் (v) விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (vi) சமூகக் கல்வியூம் வரலாறும் (vii) அழகியல் பாடங்களில் ஏதேனுமொரு பாடம் 
                  (viii) தொழில்நுட்பப் பாடத்தில் யாதேனுமொரு பாடம் (இலக்கம் i -vi வரையிலான பாடங்கள் மைய (பிரதான) பாடங்களாக கருதப்படும்)

                    பயிலுநர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒழுங்குமுறைமை

                    தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை :
                    1. 2016 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ.த.) இல் சித்தி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு 2021 ஆம் ஆண்டிலும்இ 2017 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ.த.) இல் சித்தி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு 2022 ஆம் ஆண்டிலும் ஆசிரியர்கள் ஓய்வூ பெற்றுச் செல்வதினால் பாடசாலை முறைமைக்குள் ஏற்படும் வெற்றிட எண்ணிக்கை மற்றும் தற்போது நிலவூம் ஆசிரியப் பற்றாக்குறை மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் பாடப் பல்வகைமையை ஏற்படுத்துவதற்கான தேவை தொடர்பாக கவனத்திற் கொண்டு பாட அடிப்படையில் ஆசிரியர் தேவையைக் கணக்கிட்டு அவ் எண்ணிக்கை 2018 ஆம் வருடத்தில் பயிலுநா்கள் இரண்டு குழுக்களாக ஒவ்வொரு பாட நெறிக்கும் கல்வியியற் கல்லூரிகளில் ஒரே தடவையில் வழங்கப்படக்கூடிய வசதிகளின் எண்ணிக்கையோடு பொருந்துமாறு சோ்த்துக்கொள்ளப்படும் பயிலுநா்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                    நுவரெலியா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவூனியா, முல்லைத்தீவூ, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனறாகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய கஷ்டப் பிரதேச மாவட்டங்களில் ஆரம்பக்கல்வி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் முதலிய பாடநெறிகளுக்காக அவ்வவ் பாடநெறிகளுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் முழு எண்ணிக்கையில் அதிக சதவீதம் ஒதுக்கப்படும்.

                    சேர்த்துக்கொள்ளப்படும் தொகையினர் தொடர்பாக செல்வாக்குச் செலுத்தும் பிரதான காரணியாக அமைவது ஒவ்வொரு பாடநெறிக்கும் கல்வியியற் கல்லூரிகளில் வசதிகள் வழங்கப்படக்கூடிய எண்ணிக்கையாகும்.

                    அதன்படி 2018 ஆம் ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்படும் 2016 ஆம்
                    ஆண்டில் க.பொ.த. (உ.த.) இல் சித்திபெற்ற மற்றும் 2017 ஆம் ஆண்டில்
                    க.பொ.த.(உ.த.) இல் சித்தி பெற்ற விண்ணப்பதாரா்களுக்கு வெவ்வேறாக
                    கீழ்க்காணும் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்
                    (i) வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஏதேனும்
                    பாடநெறிக்குரிய மொழிமூலத்தில் உரிய மாவட்டத்திலிருந்து
                    சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு அறியத்தரப்பட்டுள்ள எண்ணிக்கை, மாவட்ட அடிப்படையில் விண்ணப்பதாரா்கள் பெற்றுக் கொண்ட இஸட் புள்ளிகளின் தொடரொழுங்குடன் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஏனைய தகைமைகளும் சரியான விதத்தில் தொடர்புபடுத்தப்பட்டு,  4.0 இல் “கவனத்திற் கொள்க” என்ற பகுதியில் மற்றும் உரிய பாடநெறியின் கீழ் காட்டப்பட்டுள்ள முறைமைக்கு அமைய தெரிவூசெய்யப்படுவர். 

                    (உடற்கல்விப் பாடநெறிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், உரிய மொழிமூலத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் எண்ணிக்கைஇ விண்ணப்பதாரா்களின் விளையாட்டு புள்ளிகளின் தொடரொழுங்குக்கு அமைய 4.0 இல் மற்றும் உரிய பாடநெறியின் கீழ் காட்டப்பட்டுள்ள முறைமைக்கு அமைய மேற்கொள்ளப்படும்).

                    (ii) ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு ஒவ்வொரு பாடநெறிக்குமாக
                    உரிய மொழிமூலத்தில் பெருந்தோட்ட மாவட்டங்களிலிருந்து
                    சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வர்த்தமானி அறிவித்தலில்
                    குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கை, அதற்குச் செல்வாக்குச்
                    செலுத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பதாரா;கள்
                    பெற்றுள்ள இஸட் புள்ளியின் தொடரொழுங்கு மற்றும் ஏனைய
                    தகைமைகள் சரியான விதத்தில் தொடர்புபடுத்தப்பட்டு 4.0
                    இல் “கவனத்திற் கொள்க” என்ற பகுதியில் காட்டப்பட்டுள்ள
                    முறைமைக்கு அமைய தெரிவூசெய்யப்படுவர்.

                    இஸட் புள்ளி அடிப்படையில் தெரிவூ செய்யப்படும் பாடநெறிகளில் உரிய மாவட்டத்தில் ஒரே இஸட் புள்ளிகளைப் பெற்ற பல மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் ஒருவரை மாத்திரம் தேர்ந்தெடுக்க வேண்டிவரும் போது) விளையாட்டுத் திறமைக்கு ஒரே புள்ளிகளைப் பெற்ற பல மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் ஒருவரை மாத்திரம் தேர்ந்தெடுக்க வேண்டிவரும்
                    போது, முதற் தடவை க.பொ.த (சா.த) பாரீட்சையில் 3.0 இல் 3.5 இன் கீழ் குறிப்பிடப்பட்ட வகையில் பிரதான பாடங்கள் ஆறு (06) இற்கு பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் கவனத்திற் கொள்ளப்படுவதற்காகப் பயன்படுத்தப்படும். அதற்கிணங்க க.பொ.த. (சா.த.) பரீட்சைப் பெறுபேறுகளில் விசேட சித்திக்காக 04 புள்ளிகளும் அதி திறமைச் சித்திக்காக 03 புள்ளிகளும் திறமைச் சித்திக்காக 02 புள்ளிகளும்
                    சாதாரண சித்திக்காக 01 புள்ளியூம் என்ற வகையில் புள்ளிகள் வழங்கப்படுவதோடு அந்த மொத்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவூ மேற்கொள்ளப்படும்.


                    மாவட்ட அடிப்படையில் தெரிவூ செய்யப்படும்போது ஏதேனும் ஒரு பாடநெறிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மொத்தத் தரவூத் தளத்திலும் தகைமைகளைப் பூர்த்திசெய்துள்ள விண்ணப்பதாரா்கள் போதுமான எண்ணிக்கை இல்லாத பட்சத்தில் அந்த மாவட்டம் உரித்தாகும் மாகாணத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரா்களின் உரிய
                    தகைமைகளின் தொடரொழுங்கிலும், அவையூம் போதுமான எண்ணிக்கையில் இல்லாதவிடத்து தேசிய மட்ட திறமைகள் தொடரொழுங்கிலும் கவனத்திற் கொள்ளப்பட்டு அவ் வெற்றிட எண்ணிக்கை நிரப்பப்படும்.

                    விண்ணப்பங்களை online ஊடாகவும்  விண்ணப்பிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்துக

                    வர்த்தமானி பத்திரிகை 2018
                    https://www.applications.lk/government-gazette/sri-lanka-government-official-gazette-2019-january-25-sinhala-tamil-english

                    Share:

                    No comments:

                    Post a Comment

                    Popular

                    2016&2017 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியாகி உள்ளது

                    2016&2017 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வெளியாகி உள்ளது கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று வெளி...